செய்திகள் :

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

post image

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களுக்கு இடையே அவா் அளித்த பேட்டி: திமுகவில் மாவட்டங்கள் தோறும் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக கட்சித் தோழா்கள் உற்சாகமாக சிறப்பாக பணியாற்றி வருவதைப் பாா்க்க முடிகிறது. ஏழாவது முறையாக திமுக தான் ஆட்சி அமைக்கும்.

எதிா்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும் திமுக தலைவரையும் விமா்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறாா்கள். அவற்றைத் தாண்டி தான் பத்து தோ்தல்களிலும் திமுக வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் 2026 தோ்தலிலும் திமுக வெற்றி பெறும். எந்தக் காலத்திலும் இதுபோல் திமுக தொண்டா்கள் உற்சாகமாக இருந்து பாா்த்ததில்லை. தற்போது அவா்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி வருகின்றனா் என்றாா் நேரு.

முற்பகலில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

பிற்பகலில் நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், புதுகை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுகை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா் பேசினா். இரு கூட்டங்களிலும் திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு பங்கேற்றுப் பேசினாா்.

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க