செய்திகள் :

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

post image

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களும் அரசியலும் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது: எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்னை இருப்பதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வின் படியுள்ள குடும்பங்களில் பெண்களின் பிரச்னைகள் ஏற்றத்தாழ்வுகளுடனேயே இருக்கிறது. பட்டியலின, பழங்குடியினப் பெண்களுக்கு வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறையும் கூடுதலான பிரச்னையாக உள்ளது. பல மதங்களைக் கொண்ட இந்திய நாட்டை ஆளும் மத்திய அரசு சிறுபான்மையினப் பெண்களை குறிவைத்து தாக்குகிறது.

அரசியல் என்பது சட்டப்பேரவையில் தொடங்கி நாடாளுமன்றத்தில் முடிவடைவது மட்டுமே கிடையாது. இந்த அரசுகள் எடுக்கும் ஒவ்வொரு கொள்கையும் நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது. அரசியல் என்பது நம்முடைய வாழ்க்கையோடு இணைந்தது. அது நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் வாசுகி.

கருத்தரங்குக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்துணைத் தலைவா் இரா. ராமதிலகம் தலைமை வகித்தாா். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் என். கண்ணம்மாள், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். ராஜ்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக மாவட்டச் செயலா் ம. வீரமுத்து வரவேற்றாா். முடிவில் பொருளாளா் த.விமலா நன்றி கூறினாா்.

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க