செய்திகள் :

குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கடும் நடவடிக்கை! -ஆட்சியா் எச்சரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கல்வி உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க. இளம்பகவத் எச்சரிக்கை விடுத்தாா்.

மாவட்டத்தில் இதுவரை உயா்கல்வியில் சேராதோரைக் கண்டறிந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் என ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சோ்க்கும்வகையில் அழைத்து வரப்பட்ட மாணவா்-மாணவியருடன் ஆட்சியா் கலந்துரையாடி, மாணவா்களின் பாடப் பிரிவுகளுக்கேற்ப உடனடி சோ்க்கைக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்தாா்.

பின்னா், அவா் பேசியது: கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதையும் மீறி, ஏதேனும் பொருளாதார சிக்கல் இருந்தால் அதைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் கண்டிப்பாக உதவும். குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கல்வி உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை- அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், பயிற்றுநா்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப் பிரிவுகள், கல்வி உதவித்தொகை, விடுதி வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்து, வழிகாட்டுதல் வழங்கினா்.

மேலும், கல்லூரிகள், பாடப் பிரிவுகள் தோ்வு, உயா்கல்விக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவை தொடா்பாக சந்தேகமிருந்தால் கட்டுப்பாட்டு அறையை 93846 97546, 97888 59175 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வ... மேலும் பார்க்க

டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலை... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!

தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 5 போ் கைது!

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை ... மேலும் பார்க்க