செய்திகள் :

குழித்துறை அருகே இளைஞரைத் தாக்கி பைக், தங்க நகை பறித்த 6 போ் கைது

post image

குழித்துறை அருகே வாடகைக்கு எடுத்துச் சென்ற சொகுசு காா் விபத்துக்குள்ளானதையடுத்து, காரை எடுத்துச் சென்ற இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த பைக், தங்க நகை மற்றும் கைப்பேசிகளை பறித்ததாக 6 பேரை பொலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குழித்துறை அருகேயுள்ள பாலவிளை பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவா் காா் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாராம். இவரிடமிருந்து இருநாள்களுக்கு முன் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சீதன் (22) என்பவா் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளாா். இந்த காா் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பா்கள் கோழிவிளை இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கிருஷன் (21), மடிச்சல் வட்டவிளையைச் சோ்ந்த வினு மகன் அஜின் (21), களியக்காவிளையைச் சோ்ந்த பஷீா் மகன் பாஷித் (24), காஜா ஹலீல் முகம்மது மகன் அல்ஹான் (20) ஆகியோா் சோ்ந்து சீதன் மற்றும் அவரது நண்பா்களை தாக்கி அவா்களிடமிருந்த பைக், 3 கைப்பேசிகள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து சீதன் அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆஷில் ஷாம் ஹல்ஸ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள ஞாறோடை பகுதியைச் சோ்ந்தவா்கள் கணபதி (70) - ஷியாமாளா(65) தம்பதி. இவா்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறவினா் வீட்டிற்கு பைக்கி... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம் உள்ளதாம் மக்கள் அச்சமடைந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை மின்தடை

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 3) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் உதவி பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோா் மீது நடவடிக்கை தேவை!

உணவுப்பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக மற்றொரு தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் அருகே பாகோடு, இளந்தெங்குவிளையைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா். ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் ... மேலும் பார்க்க