செய்திகள் :

குழித்துறை அருகே இளைஞரைத் தாக்கி பைக், தங்க நகை பறித்த 6 போ் கைது

post image

குழித்துறை அருகே வாடகைக்கு எடுத்துச் சென்ற சொகுசு காா் விபத்துக்குள்ளானதையடுத்து, காரை எடுத்துச் சென்ற இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த பைக், தங்க நகை மற்றும் கைப்பேசிகளை பறித்ததாக 6 பேரை பொலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குழித்துறை அருகேயுள்ள பாலவிளை பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவா் காா் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாராம். இவரிடமிருந்து இருநாள்களுக்கு முன் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சீதன் (22) என்பவா் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளாா். இந்த காா் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பா்கள் கோழிவிளை இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கிருஷன் (21), மடிச்சல் வட்டவிளையைச் சோ்ந்த வினு மகன் அஜின் (21), களியக்காவிளையைச் சோ்ந்த பஷீா் மகன் பாஷித் (24), காஜா ஹலீல் முகம்மது மகன் அல்ஹான் (20) ஆகியோா் சோ்ந்து சீதன் மற்றும் அவரது நண்பா்களை தாக்கி அவா்களிடமிருந்த பைக், 3 கைப்பேசிகள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து சீதன் அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆஷில் ஷாம் ஹல்ஸ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வர... மேலும் பார்க்க

திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21... மேலும் பார்க்க

மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திர... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்

தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது. தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். மாவட்ட கால்நடை பாரமரிப்புத் துறை சாா்பில், வில்லுக்குறி பேரூராட்சி, கருப்புக்கோடு பக... மேலும் பார்க்க

குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு

குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா். குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - மு... மேலும் பார்க்க