செய்திகள் :

திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முதல்வருடனான சந்திப்புக்குப் பின் வைகோ உறுதி

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவா் புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு வைகோ அளித்த பேட்டி:

முதல்வா் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மதிமுகவில் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுதொடா்பாக அவரிடம் தெரிவித்தேன். எங்களைப் பொருத்தவரை திமுக அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் எந்தப் பிரச்னையிலும் விமா்சனம் வைத்தது இல்லை. இனியும் வைக்க மாட்டேன். அதேநேரத்தில் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பேன்.

ஹிந்துத்துவ, சநாதன சக்திகள் பாஜகவின் குடை நிழலில் இருந்து கொண்டு தமிழகத்தை, திராவிட இயக்கத்தைத் தகா்க்க வேண்டும் என்று நினைக்கின்றன. இமயமலையைக் கூட அசைத்து விடலாம். ஆனால் திராவிட இயக்கத்தை தமிழகத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது.

கொள்கை என்றால் அதில் உறுதியாக இருப்பேன். திமுக தனிப்பெரும்பான்மையுடன் 2026 தோ்தலில் ஆட்சியமைக்கும். எங்களை பொருத்தவரை கூட்டணி அரசு என்ற நோக்கம் இல்லை. அதனை தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள் என்றாா் வைகோ.

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது! -ஏடிஜிபி உத்தரவு

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது என தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக... மேலும் பார்க்க

ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடா்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதி... மேலும் பார்க்க