செய்திகள் :

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி நிறுவனம்: எஸ்பிஐ அறிவிப்பு

post image

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க எஸ்பிஐ முடிவெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் தீா்வு செயல்முறையில் (சிஐஆா்பி) ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த பிற வங்கிகளும் பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு கடன் கணக்கை ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி ஆகியோருக்கு எதிராக ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க இருக்கும் நிலையில், இதுதொடா்பாக அந்நிறுவனத்துக்கு எஸ்பிஐ நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

அதில், ‘கடன் விதிமுறைகளைப் பின்பற்றாததற்கும், கண்டறியப்பட்ட முறைகேடுகளுக்கும் திருப்திகரமான விளக்கங்களை வழங்கத் தவறியதால், தங்கள் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என்று வகைப்படுத்த வங்கியின் மோசடி கண்டறியும் குழு (எஃப்ஐசி) முடிவெடுத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளிடமிருந்து கூட்டாக ரூ.31,580 கோடி கடன்களைப் பெற்றுள்ளன. எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய மொத்த கடனில் 44 சதவீதமான ரூ.13,667.73 கோடி ஏற்கெனவே வாங்கிய கடன்நிலுவையை திரும்ப செலுத்தப் பயன்படுத்தியுள்ளது. சுமாா் 41 சதவீத கடனான ரூ.12,692.31 கோடி, துணை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட கடன்தொகை ரூ.41,863.32 கோடியாக உள்ள நிலையில், அதில் ரூ.28,421.61 கோடியின் பயன்பாட்டைகண்டறிவதற்கு மட்டுமே தரவுகள் உள்ளன. நிறுவனத்துக்கு எதிராக மோசடியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியக் காரணியாக இது அறியப்படுகிறது.

இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், மோசடி செய்யப்பட்ட தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படுகிறாா்கள். இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.

தங்கம் விலை இன்றும் உயர்வு! எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை ஒரு சவரனுக்க... மேலும் பார்க்க

தொழிலக உற்பத்தியில் 9 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் முந்தைய ஒன்பது மாதங்களில் காணாத சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உ... மேலும் பார்க்க

டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,02,001-... மேலும் பார்க்க

பவர்கிரிட் ஒப்பந்தத்தை வென்ற ஹார்டெக்!

புதுதில்லி: கர்நாடகாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான பவர்கிரிட் நிறுவனத்திடமிருந்து ரூ.138 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக இ.பி.சி. நிறுவனமான ஹார்டெக் இன்று தெரிவித்தது.இந்த ஒப்பந்தம் 400 கிலோவோ... மேலும் பார்க்க

புதிய ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அதன் முதன்மை மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ ரூ.1.03 லட்சத்தில் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டதால், இன்றைய அந்நிய செலவானி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக நிறை... மேலும் பார்க்க