செய்திகள் :

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

post image
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.

அப்படித்தான் கூகுள் பட்டியில் மூலம் ஹோட்டல் தங்குவதற்கு முன்பதிவு செய்த போது ஒரு பெண் ரூ.93 ஆயிரத்தை இழந்துள்ளார்.

சமீபத்தில் ஒரிசாவின் பூரியில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்பதிவு செய்தபோது இந்த ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.

ஹோட்டல் முன் பதிவு செய்வதற்காக 'Mayfair Heritage Puri’ எனத் தேடியபோது தோன்றிய முதல் லிங்கை க்ளிக் செய்துள்ளார். அதில் முன்பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடர்ந்துள்ளார், ஹோட்டல் தொடர்பான தகவலைக் கண்டறிந்த பிறகு அந்தப் பெண் அவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். தங்கும் அறை தொடர்பான படங்கள், தகவல்களை மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணை நம்ப வைக்க அனுப்பியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பி முன்பதிவை உறுதிப்படுத்த ரூபாய் 93 ஆயிரத்து 600 ரூபாய் ஆன்லைன் மூலம் மாற்றியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு ஒரு போலியான இன்வாய்ஸ் கிடைத்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டபோது, அந்த அமைப்பு செயலிழந்துவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

மறுநாள் காலையில் மோசடி செய்பவரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்து கூகுள் பே செயலியை திறந்து அதில் ’பணம் செலுத்து’ என்பதை க்ளிக் செய்து வழங்கப்பட்ட முன்பதிவு ஐடியை உள்ளீடு செய்து உறுதிப்படுத்தலை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏதோ தவறு இருப்பதை அந்தப் பெண் உணர்ந்து அதனைச் செய்ய மறுத்து மீண்டும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலைக் கேட்டுள்ளார்.

அதன் பின்னர்தான் அந்த மோசடிக்காரர் தான் பிடிப்பட்டதை உணர்ந்து உடனடியாகத் தொலைபேசியை துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த ஹோட்டலின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்களை தேடி தொடர்புகொண்ட போது அவர் பயன்படுத்தியது போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் ம... மேலும் பார்க்க

கிளம்பாக்கம்: இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் கூட்டுப் பாலியல் தொல்லை - லைவ் லோக்கேஷனால் தப்பித்தது எப்படி?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம... மேலும் பார்க்க

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க