செய்திகள் :

கேட் திறந்து இருந்ததா? முரண்படும் வேன் ஓட்டுநர் பேட்டியும் ரயில்வே அறிக்கையும்!

post image

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், ரயில்வே வெளியிட்ட அறிக்கைக்கு முரணான கருத்தை வேன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலியான நிலையில், பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரயில்வே அறிக்கை

இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் முரண்பாடு இருந்தது.

முதலில் வெளியிட்ட அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடுவதற்கு முற்பட்டபோது, வேன் ஓட்டுநர் கேட்டதால் வாகனத்தை அனுமதித்ததாகக் கூறப்பட்டது.

பின்னர், திருத்தப்பட்ட இரண்டாவது அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடியதாகவும் வேன் ஓட்டுநர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மீண்டும் கேட்டை திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வேன் ஓட்டுநர் பேட்டி

இந்த விபத்து குறித்து பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (வயது 48) விளக்கம் அளித்துள்ளார். ரயில்வே கேட் மூடப்படவில்லை என்றும் திறந்துதான் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர் விஸ்வேஷும் ரயில்வே கேட் திறந்து இருந்ததை உறுதி செய்துள்ளார்.

வேன் ஓட்டுநரே கேட்டிருந்தாலும் ரயில் வருவது தெரிந்தும் கேட்டை திறந்தது கேட் கீப்பரின் தவறு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பங்கஜ் சர்மாவை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

The van driver has made a statement contradicting the statement issued by the Railways regarding the accident where a train hit a school van in Cuddalore.

இதையும் படிக்க : கடலூர் கோர விபத்துக்கான காரணம் என்ன? - ரயில்வே விளக்கம்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க