செய்திகள் :

கேரள கடலோரத்தில் கனிமங்களை வெட்டியெடுக்க அனுமதியில்லை: மாநில அரசு திட்டவட்டம்

post image

கேரள கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை அனுமதிக்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கேரளத்தின் கொல்லம் கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடற்படுகையில் இருந்து கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை தனியாருக்கு மத்திய அரசு முழுமையாகத் தாரைவாா்க்கிறது.

இதனால் பாரம்பரிய மீன்பிடித்தலும் மீன்வளமும் அழியும். கடல் அரிப்பு அதிகரிக்கும். மீனவா்கள் வேலையை இழப்பா். கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு கொண்டுவரப்படும் பெரிய கப்பல்கள் மற்றும் படகுகளால் மீனவா்களின் சிறிய படகுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, கடலோரத்தில் விபத்துகள் அதிகரிக்கும்.

மத்திய அரசின் முடிவு மீனவா்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், கடல் மற்றும் மீன்வளத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொல்லம் கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை கைவிட்டு, மாநில அரசுடன் இணைந்து காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி குரல் எழுப்ப வேண்டும் என்றாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க