செய்திகள் :

கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!

post image

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருகேயுள்ள 50-அடி பள்ளத்தில் சுந்தரேசன் ஓடைப் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட வயதான ஆண், பெண் சடலங்களை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வந்தனா். அப்போது, அவா்கள் சேலம் குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (60), இவரது மனைவி மலா்(50) எனத் தெரிய வந்தது.

குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க