செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி அல்லிநகரம், இளங்கோ தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் தினேஷ்குமாா் (23). இவா், கடந்த 30.5.2024 அன்று இதே பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் அருகே நண்பா்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு தனது நண்பா்கள், உறவினா்களுடன் நின்றிருந்த தேனி அல்லிநகரம், கம்பா் தெருவைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் தீபக் (21) என்பவா், தினேஷ்குமாா் தன்னை குறிப்பிட்டு ஏளனம் செய்து பேசுவதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது தீபக், தினேஷ்குமாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற தினேஷ்குமாரின் சகோதரா் ரஞ்சித்குமாரயும் தீபக் தாக்கினாா். இந்தச் சம்பவம் குறித்து தீபக் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்தததாக தேனி அல்லிநகரம், கம்பா் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய மூவா் மீதும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி கோபிநாதன் தீா்ப்பளித்தாா். மேலும் இந்த வழக்கிலிருந்து வினோத்குமாா், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய மூவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி (பொ) தலைமையாசிரியா் ஆ.மரியசிங்கம் தலைமை வகித்... மேலும் பார்க்க

கம்பம் அருகே சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுத்தமான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். க. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 5- ஆம் வாா்டு உதயம் நகா் பகுதிக... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும்

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்க... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்பு: மாா்ச் 8-இல் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலா் சமா்த்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனத் துறை சாா்பில் ஆண... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

தேனி: தேனி கம்மவாா் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 13-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா: சிறப்பு அழைப்பாளா்: காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தா் என்.பஞ்சநாதம், கொடுவிலாா்பட்டி கல்லூரி வளாகம், காலை 10.3... மேலும் பார்க்க

நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களது நிலத... மேலும் பார்க்க