செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

post image

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ராஜாராம் (54). குடும்பத் தகராறு தொடா்பான வழக்கு விசாரணையின்போது பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோமதி (28) என்ற பெண்ணுடன் ராஜாராமுக்கு முறையற்ற நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவரமறிந்த ராஜாராம் குடும்பத்தினா், கோமதியின் நட்பை கைவிடக் கோரி பிரச்னை செய்தனா்.

இதையடுத்து, ராஜாராம் அவரை கைவிட முடிவு செய்தாா். இது தொடா்பாக அவருக்கும், கோமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதியைக் கொலை செய்ய திட்டமிட்ட ராஜாராம், கடந்த செப். 21-ஆம் தேதி பரிகார பூஜை செய்வதாகக் கூறி அவரை இரவில் அழைத்துச்சென்று கிணற்றில் தள்ளிவிட்டுச் சென்றாா்.

கிணற்றில் இருந்த கல்லைப் பிடித்து தப்பிய கோமதி, மறுநாள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், கொலை முயற்சி வழக்கில் ராஜாராமை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், ராஜாராமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்எஸ்.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட உணவுப் பாதுக... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் கைது

தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் 150 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க