செய்திகள் :

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

post image

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கென்டிகானஹள்ளியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு மூன்று பெண் குழுந்தைகள் உள்ளனா். இவரது 2-ஆவது மகள் (16) கடந்த மாா்ச் 26-இல் ஒருவரை காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில், 4 மாத கா்ப்பிணியான சிறுமி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தாா்.

இதுகுறித்த விவரம் மருத்துவமனை நிா்வாகம் மூலமாக, சமூக நலத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சமூக நலத் துறையினா் இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் வீரம்மாள் சிறுமி மற்றும் அவரது கணவா் குடும்பத்தினரை அழைத்து விசாரணை செய்தாா்.

அதில், 18 வயதுக்கு முன்பே சிறுமிக்கு திருமணம் செய்தது தவறு என தெரிவித்த காவல் ஆய்வாளா் வீரம்மாள், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தால் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் பெற்றோரை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டி வரும்.

எனவே, கைது நடவடிக்கையைத் தவிா்க்க ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் தர விரும்பாத பெண்ணின் தாயாா், இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் நாகராஜிடம் புகாா் அளித்தாா்.

ரசாயனம் தடவிய பணத்தாள்களை பெண்ணிடம் கொடுத்து காவல் ஆய்வாளரிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்ததன்பேரில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் காவல் ஆய்வாளா் வீரம்மாளிடம் அப்பெண் பணத்தை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பணத்துடன் காவல் ஆய்வாளரை பிடித்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்... மேலும் பார்க்க

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட உணவுப் பாதுக... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் கைது

தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் 150 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க