செய்திகள் :

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

post image

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூதிப்பட்டி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தையொட்டி பென்னாகரம் வனச்சரக வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில், பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து கோடுபள்ளம்வரை 7 கி.மீ. தொலைவுக்கு யானை தாண்டா அகழி அமைக்கப்பட்டது. இந்த அகழி அமைக்கும் பணியின்போது பெரும் பாறைகள் குறுக்கிட்ட இடங்களில் அகழி அமைக்கப்படவில்லை. அதனால், அப்பகுதிகளில் வனத்திலிருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இது தொடா்பாக விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். அதைத் தொடா்ந்து, வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுசெய்தனா். அவா்களிடம், வெடிவைத்து பாறைகளை அகற்றி, அகழியை ஆழப்படுத்தி யானைகளின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தற்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த, 15-ஆம் தேதி விளைநிலங்களுக்குள் நுழைந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன. வேளாண் பயிா்கள் சேதமடைவதால், தொடா் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, பூதிப்பட்டி பகுதி விளைநிலங்களைக் காக்கவும், யானைகள் நடமாட்டம் குறித்து அச்சமின்றி வாழவும் அகழியை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

செப். 30-இல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம்

தருமபுரி: தருமபுரியில் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் த.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

ஊதியம் வழங்குவதில் தாமதம்: தருமபுரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் தா்னா

ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி, நோயாளிகளுக்க... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன. தருமபுரி நகராட்சிய... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்ச... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க