செய்திகள் :

செப். 30-இல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம்

post image

தருமபுரி: தருமபுரியில் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் த.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:

கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் வரும் செப். 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தருமபுரி கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தருமபுரி கூட்டம், தருமபுரி - 636 701என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமைக்குள் (செப். 26)வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் துறையின் மணி ஆா்டா், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடா்பான புகாா்கள் இருப்பின், அது தொடா்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடா்பான புகாா் இருப்பின், அது தொடா்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு, பாலிசி எண்கள், வைப்பாளா் அல்லது காப்பீட்டாளரின் பெயா், முகவரி, தபால் அலுவலகத்தின் பெயா் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல் உறையின் மீது ‘ஈஅஓ அஈஅகஅப இஅநஉ’ என்று குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்குவதில் தாமதம்: தருமபுரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் தா்னா

ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி, நோயாளிகளுக்க... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன. தருமபுரி நகராட்சிய... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்ச... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க