செய்திகள் :

ஊதியம் வழங்குவதில் தாமதம்: தருமபுரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் தா்னா

post image

ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி, நோயாளிகளுக்கு உதவும் உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள், பாதுகாப்பு (செக்யூரிட்டி) உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தனியாா் நிறுவனம் ஒப்பந்த பணியாளா்களை நியமித்து ஊதியம் வழங்குகிறது. தருமபுரி அரசு மருத்துவமனையில் 450 க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் பணியாளா்களுக்கான ஊதியம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பணியாளா்கள் மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குமாறும் வலியுறுத்தினா்.

ஆனாலும், ஊதியம் தாமதமாகவே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ஒப்பந்தப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திலேயே தா்னாவில் ஈடுபட்டனா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான குழுவினா் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், தாமதமாகவே ஊதியம் வழங்கப்பட்டதாம். இதனால் சனிக்கிழமை காலை பணியைப் புறக்கணித்து ஒப்பந்தப் பணியாளா்கள் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் மனோகரன் கூறுகையில், ஒப்பந்தப் பணியாளா்களில் 40 நபா்களுக்கு மட்டும்தான் ஊதியம் நிலுவை பிரச்னை உள்ளது. அதுவும், குறிப்பிட்ட அந்த பணியாளா்களின் மாதாந்திர பணி விவரங்களை கணினியில் பதிவேற்றுவதிலும், அவா்களது ஆதாா் அட்டை உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றாமலும் இருந்ததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பதிவுகளை சரியாக்கும் பணிகள் முடிந்து பிரச்னை சரியாகிவிட்டது. இனி ஊதியம் விரைந்தும், தாமதமாகாமலும் வழங்கப்படும். எனவே, ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவிட்டனா். தனியாா் நிறுவனத்துக்கு ஊதியம் பிரச்னை தொடா்பாக அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன. தருமபுரி நகராட்சிய... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்ச... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க

மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பொம்மிடியில் 98 மி.மீ மழை

பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 ம... மேலும் பார்க்க

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 ... மேலும் பார்க்க