பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புரட்டாசி பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை, உளுந்து பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.