செய்திகள் :

மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி பொருளாதார மேம்பாடு, சுயசாா்பு தன்மையை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள இப்பயிற்சி மையத்துக்கு தற்காலிக பயிற்சி மேலாளா் ஒருவா் மற்றும் ஒரு கணக்காளா் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

பயிற்சி மேலாளா் பதவிக்கு மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சியுடன் 25 வயது முடிந்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம் பெற்றவராகவும் ஓராண்டு சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

கணக்காளா் பதவிக்கு சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், 25 வயது முடிந்தவராகவும் கணினியில் டேலி, அக்கவுன்ட், ஏஎம்பி, மற்றும் சாப்ட்வோ் தெரிந்திருத்தல் வேண்டும். குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் கணக்காளராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுடையோா் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா் மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை 2வது தளம், தருமபுரி என்ற முகவரிக்கு செப்.22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க

பொம்மிடியில் 98 மி.மீ மழை

பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 ம... மேலும் பார்க்க

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 ... மேலும் பார்க்க

வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களுக்கு அஞ்சலி

வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு, சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் 147-வது பிறந்தநாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக : தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் மாவட்ட பொறுப்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6500 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்த... மேலும் பார்க்க