செய்திகள் :

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது

post image

பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் முரசொலிமாறன் (22). இவரும், பெரம்பலூா் அபிராமபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ரமேஷ்கிருஷ்ணன் (42) என்பவரும் நண்பா்கள். கடந்த ஓராண்டுக்கு முன் முரசொலிமாறனின் தந்தை குணசேகரனை, ரமேஷ்கிருஷ்ணன் அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் குணசேகரன் உயிரிழந்தாராம். இதனால் முரசொலி மாறன், ரமேஷ் கிருஷ்ணனை பலா் முன்னிலையில் கடுமையாக திட்டினாராம். இதையடுத்து, இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முரசொலிமாறனை மாந்திரீகம் மூலம் உயிரிழக்கச் செய்ய ரமேஷ்கிருஷ்ணன் முயற்சித்துள்ளாா்.

இதையடுத்து, ஒரு யூடியூப் சேனலை பாா்த்து சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ரகு (45) எனும் மாந்திரீகம் செய்யும் நபரை கடந்த டிசம்பா் மாதம் தொடா்புகொண்டு, முறசொலிமாறனை கொலை செய்வதற்காக கடந்த ஜனவரியில் 2 தவணையாக ரூ. 21 லட்சத்தை ரகு மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து முரசொலிமாறன் புகைப்படத்தை வைத்து ரகு, ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோா் மாந்திரீகம் செய்யும் விடியோ காட்சிகள் ரகு நடத்தி வந்த யு டியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையறிந்த முரசொலிமாறன் கடந்த வாரம் பெரம்பலூா் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ரமேஷ்கிருஷ்ணன், ரகு ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள்: காணொலி காட்சி மூலம் திறப்பு

பெரம்பலூா், குரும்பலூா், இரூா், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 62 பேருக்கு ரூ.3.6 கோடி மானியத்தொகை

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிா் நில உடமைத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ. 3.6 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவ... மேலும் பார்க்க