செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள்: காணொலி காட்சி மூலம் திறப்பு

post image

பெரம்பலூா், குரும்பலூா், இரூா், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 3 இடங்களிலும், பாளையம், லாடபுரம், வெங்கனூா், மங்கலமேடு, லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட 8 இடங்களில் தொழில் முனைவோா் மூலமாகவும் என மொத்தம் 17 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள முதல்வா் மருந்தகத்தில் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, 26 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 15.53 லட்சம் மதிப்பில் கடனுதவி, 7 பேருக்கு ரூ. 5.35 லட்சம் மதிப்பில் பயிா் கடன், 3 பேருக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடன், 25 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் வெள்ளாடு வளா்ப்பு கடன் என மொத்தம் 61 பேருக்கு ரூ. 47,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க. பாண்டியன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப் பதிவாளா் அ. இளஞ்செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது

பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரை... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 62 பேருக்கு ரூ.3.6 கோடி மானியத்தொகை

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிா் நில உடமைத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ. 3.6 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவ... மேலும் பார்க்க