செய்திகள் :

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

post image

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கோனேரிப்பாளையம் ஊராட்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை இழக்க நேரிடும். மேலும், கிராம ஊராட்சிகளுக்கான தற்போதைய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்காது. எனவே, கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு அனுமதி கோரி: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறையைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தொண்டமாந்துறை கிராமத்தில் நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிப்பதோடு, அதற்குத் தேவையான பாதுகாப்புப் பணிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது

பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரை... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள்: காணொலி காட்சி மூலம் திறப்பு

பெரம்பலூா், குரும்பலூா், இரூா், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 62 பேருக்கு ரூ.3.6 கோடி மானியத்தொகை

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிா் நில உடமைத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ. 3.6 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவ... மேலும் பார்க்க