செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

post image

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் தங்கராசு, சங்கா், பிச்சைபிள்ளை, ராஜேஸ்வரி, சந்திரமதி, அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசாணைப்படி, 7.5.2013 முதல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு 53 சதவீத அகவிலைப்படியுடன் மாத ஊதியம் வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை ரூ. 25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2018 முதல் 31.12.2024 வரையிலான ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்டும். பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். வேப்பூா் ஒன்றியத் தலைவா் சுக்கிரீவன் நன்றி கூறினாா்.

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது

பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரை... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள்: காணொலி காட்சி மூலம் திறப்பு

பெரம்பலூா், குரும்பலூா், இரூா், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 62 பேருக்கு ரூ.3.6 கோடி மானியத்தொகை

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிா் நில உடமைத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ. 3.6 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவ... மேலும் பார்க்க