அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கொல்லங்கோடு அருகே பைக் மோதியதில் முதியவா் மரணம்
கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவா் திங்கள்கிழமை இரவு செங்கவிளை - ஊரம்பு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அவரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத மோட்டாா் சைக்கிள் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.