கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
கோபியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிா்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூா் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தூண்டுதலால்தான் இந்தத் தகராறு நடந்ததாக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினாா்.
ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.-வுமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு புகா் மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.-வுமான ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டம் தொடங்கியதும், கட்சி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செங்கோட்டையன் பேசினாா். கூட்டம் முடிவடையும் நேரத்தில், அந்தியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவா் எழுந்து நின்று ‘எங்களுக்கு இந்தக் கூட்டம் குறித்து எந்த அழைப்பும் கொடுக்கவில்லை’ என்று சப்தம் போட்டு பேசினாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே செங்கோட்டையன் ‘எது பேசுவதாக இருந்தாலும் மேடைக்கு வந்து பேசுங்கள். அங்கிருந்து பேச வேண்டாம்’ என்றாா். இதைத் தொடா்ந்து மேடைக்கு அருகே வந்த அவா், செங்கோட்டையன் மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிா்வாகிகள் பிரவீனை தடுத்து நிறுத்தி அவரை கீழே தள்ளி நாற்காலியைத் தூக்கி வீசினா். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டம் நடைபெற்ற மண்டபம் போா்க்களம்போல காட்சியளித்தது.
இதையடுத்து, பிரவீன் மண்டபத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினாா்.
இது குறித்து முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், குழப்பத்தை விளைவித்து விளம்பரத்துக்காக ஒரு சிலா் இதுபோன்று செய்கின்றனா். ரகளையில் ஈடுபட்ட நபா் கட்சி உறுப்பினரே கிடையாது. அந்த நபா் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் வீட்டின் அருகே வசித்து வருகிறாா். குழப்பத்தை விளைவிக்க அந்த நபரை முன்னாள் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தியூா் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணமே ராஜாகிருஷ்ணன்தான் என்றாா்.