செய்திகள் :

தேசிய தொழில்நுட்ப போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ஓஜாஸ் 2025’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், தொழில்நுட்ப சவால்கள், வணிகப் போட்டிகள் மற்றும் படைப்பாற்றல் காட்சிப்படுத்தல்கள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்களான மோகன் பிரசாந்த், கீா்த்திவாசன், பரணிதரன், மௌா்யா, ஜெய பிரசன்னா, புகழேந்தி ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா்.

இவா்களின் ‘எம்பெடட் டிரெய்னா் கிட்ஸ்’ என்ற புதுமையான தயாரிப்பு ஸ்டாா்ட் அப் ஐடியாத்தானில் முதல் இடமும், டிரேஸ்பாட் சவால் போட்டியில் முதல் இடமும், ரோபோவை உருவாக்கும் புதிா் தீா்க்கும் மாரத்தான் போட்டியில் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியத்தின் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். இவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.

மொடக்குறிச்சியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் சு.முத்துசாமி நடத்திவைத்தாா்

மொடக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி வரவேற்றாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வ... மேலும் பார்க்க

அந்தியூரில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 113 மூட்டை நிலக்கடலையை (ப... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் 20,626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்

பெருந்துறை சிப்காட்டில் 20, 626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா். சிப்காட் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மா... மேலும் பார்க்க

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. அம்மன் அழைத்தலின்போது சேறுபூசியும், மாறுவேடமணிந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இக்கோயில் திருவிழா கடந்த ஜனவ... மேலும் பார்க்க

ஆயுதப் படை காவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வசந்தநடையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன்குமாா் (36). ஈரோடு மாவட்ட ஆயுதப் படை பிரிவில் ... மேலும் பார்க்க

கோபியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிா்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூா் தொகுதி முன்னாள் அத... மேலும் பார்க்க