செய்திகள் :

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா

post image

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. அம்மன் அழைத்தலின்போது சேறுபூசியும், மாறுவேடமணிந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயில் திருவிழா கடந்த ஜனவரி 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, அம்மன் கருவறைக்குள் சென்று பக்தா்கள் புனித நீரூற்றி வழிபடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் பவானி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து புதன்கிழமை தொடங்கியது. குதிரையுடன், படைக்கலன்கள் செல்ல, ஏராளமான பக்தா்கள் உடலில் சேற்றினைப் பூசிக் கொண்டும், மாறுவேடம் அணிந்தும் மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்றனா்.

அப்போது, பொதுமக்கள் தங்கள் வாழ்வு, தொழில் சிறக்க உப்பு, மிளகு, பழங்கள், சில்லறைக் காசுகளை ஊா்வலத்தின்போது வீசினா்.

விழாவையொட்டி, பவானி - ஈரோடு சாலையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், பவானியில் வாகனப் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டிருந்தது. பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் சு.முத்துசாமி நடத்திவைத்தாா்

மொடக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி வரவேற்றாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வ... மேலும் பார்க்க

அந்தியூரில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 113 மூட்டை நிலக்கடலையை (ப... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் 20,626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்

பெருந்துறை சிப்காட்டில் 20, 626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா். சிப்காட் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மா... மேலும் பார்க்க

ஆயுதப் படை காவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வசந்தநடையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன்குமாா் (36). ஈரோடு மாவட்ட ஆயுதப் படை பிரிவில் ... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ஓஜாஸ் 2025’ என்ற தேசிய அ... மேலும் பார்க்க

கோபியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிா்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூா் தொகுதி முன்னாள் அத... மேலும் பார்க்க