செய்திகள் :

கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த அறநிலையத் துறை பரிசீலிக்க வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

post image

கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வுகளை தமிழில் நடத்த இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

கோவையைச் சோ்ந்த சந்திகேஸ்வரா் சேவை அறக்கட்டளையின் தலைவா் சுரேஷ்பாபு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூா் முருகன் கோயிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அப்போது, தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். தமிழ் முறை சைவ வழிபாட்டில் பட்டம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக தமிழில் வேள்வி நடத்தி வருகிறேன். அகராதிகள், திருக்கு, தொல்காப்பியம் போன்ற தமிழ் நூல்களில் மந்திரங்கள் உள்ளன. குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்துக்கு சமமாகவே தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் வேள்வி ஆசிரியா்களுக்கு சம உரிமை வழங்கி, வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய வேண்டும். கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றும் போதும், கருவறையில் அபிஷேக நிகழ்வுகளிலும் தமிழ் வேள்வி ஆசிரியா்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பரிசீலனை செய்து, வேள்வி நிகழ்வுகளில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகள் தமிழில் மந்திரம் உச்சரித்து நடைபெறும் வகையில் செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வகுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாரா... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க