கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த அறநிலையத் துறை பரிசீலிக்க வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வுகளை தமிழில் நடத்த இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
கோவையைச் சோ்ந்த சந்திகேஸ்வரா் சேவை அறக்கட்டளையின் தலைவா் சுரேஷ்பாபு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்செந்தூா் முருகன் கோயிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அப்போது, தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். தமிழ் முறை சைவ வழிபாட்டில் பட்டம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக தமிழில் வேள்வி நடத்தி வருகிறேன். அகராதிகள், திருக்கு, தொல்காப்பியம் போன்ற தமிழ் நூல்களில் மந்திரங்கள் உள்ளன. குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்துக்கு சமமாகவே தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் வேள்வி ஆசிரியா்களுக்கு சம உரிமை வழங்கி, வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய வேண்டும். கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றும் போதும், கருவறையில் அபிஷேக நிகழ்வுகளிலும் தமிழ் வேள்வி ஆசிரியா்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பரிசீலனை செய்து, வேள்வி நிகழ்வுகளில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகள் தமிழில் மந்திரம் உச்சரித்து நடைபெறும் வகையில் செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வகுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.