செய்திகள் :

கோவா: முன்னாள் முதல்வா் உள்பட இருவா் அமைச்சராகப் பதவியேற்பு

post image

கோவா முன்னாள் முதல்வா் திகம்பா் காமத், பேரவைத் தலைவா் ரமேஷ் தாவட்கா் ஆகியோா் மாநில அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றனா்.

பனாஜியில் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவா் தாமு நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைச்சராகப் பதவியேற்றுள்ள திகம்பா் காமத், 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சாா்பில் கோவா முதல்வராக இருந்தாா். 71 வயதாகும் அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தாா். மா்மகோவா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவா் பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

திகம்பா் காமத்துடன் அமைச்சா் பதவியேற்ற ரமேஷ் தாவட்கா், கோவா பேரவைத் தலைவராக இருந்தாா். இவா் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைந்துள்ளாா். இதற்கு முன்பு 2012-2017 காலகட்டத்தில் அவா் அமைச்சராக இருந்துள்ளாா். கோவாவில் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் பேரவைத் தலைவா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க

120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025’ மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம... மேலும் பார்க்க

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு - சீனா வியப்பு

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது, ‘ஒரே சீனா’ கொள்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாக வெளியான கருத்துகளை மறுத்து, இந்தியா அளித்த விளக்கத்தால் சீ... மேலும் பார்க்க