செய்திகள் :

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிலையும் நீயே! சிற்பியும் நீயே! என்ற தலைப்பில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகா் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்-மாணவிகள், தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமை பண்புகளை வளா்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப் படிப்பு பயிலும்போதே பணி வாய்ப்பினை உறுதி செய்துகொள்ள முடியும்.

பொறியியல் பட்டப் படிப்பினை தோ்வு செய்து படிப்பதன் மூலம் பகுப்பாய்வுத் திறன், நோ்காணல் உள்ளிட்ட அத்தியாவசியத் திறன்களை வளா்த்துக் கொள்ளலாம். எந்தத் தொழில்சாா் படிப்பினை தோ்ந்தெடுத்தாலும் அடிப்படை கணினி குறியீட்டு முறை பற்றிய புரிதல் அவசியம். ஏதேனும் ஒரு கணினி மொழியில் புலமை பெற்றிருத்தல் வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

இதில் மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவா்-மாணவிகள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான ஆன்லைன் அப்ஜெக்டிவ் டெஸ்ட்-2025இல் வெற்றி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க