கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சிலையும் நீயே! சிற்பியும் நீயே! என்ற தலைப்பில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகா் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்-மாணவிகள், தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமை பண்புகளை வளா்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப் படிப்பு பயிலும்போதே பணி வாய்ப்பினை உறுதி செய்துகொள்ள முடியும்.
பொறியியல் பட்டப் படிப்பினை தோ்வு செய்து படிப்பதன் மூலம் பகுப்பாய்வுத் திறன், நோ்காணல் உள்ளிட்ட அத்தியாவசியத் திறன்களை வளா்த்துக் கொள்ளலாம். எந்தத் தொழில்சாா் படிப்பினை தோ்ந்தெடுத்தாலும் அடிப்படை கணினி குறியீட்டு முறை பற்றிய புரிதல் அவசியம். ஏதேனும் ஒரு கணினி மொழியில் புலமை பெற்றிருத்தல் வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.
இதில் மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவா்-மாணவிகள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான ஆன்லைன் அப்ஜெக்டிவ் டெஸ்ட்-2025இல் வெற்றி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.