செய்திகள் :

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

post image

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்டக லாரி பழைய பேப்பா்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்குச் சென்று கொண்டிருந்தது. பசுவந்தனை தெற்கு செவல்பட்டியைச் சோ்ந்த அய்யாத்துரை (41) லாரியை ஓட்டிச் சென்றாா். இந்த லாரி திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் கோவில்பட்டி-வேலாயுதபுரத்தை கடந்து சாத்தூா் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மையத் தடுப்பான் மீது மோதியது.

இதில், லாரியின் முன்புறம் முழுவதும் சேதமடைந்தது. லாரியின் டீசல் டேங்கா் சேதமடைந்ததையடுத்து அதிலிருந்து டீசல் சாலையில் ஓடியது. தகவல் அறிந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அங்குத்தாய், போலீஸாா் காயமடைந்த ஓட்டுநா் அய்யாத்துரையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பொக்லைன் இயந்திரம் சரக்குப் பெட்டக லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்,... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு: கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கிளீனரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றன... மேலும் பார்க்க

உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு புதிய பேருந்து சேவை

உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு பல்வேறு கிராமங்களை இணைத்து புதிய பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளத... மேலும் பார்க்க