செய்திகள் :

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்

post image

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.

ஆயுதபூஜை வரும் அக். 1ஆம் தேதியும், தீபாவளி பண்டிகை அக். 20 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சொந்த ஊா் செல்ல விரும்பும் பயணிகள் பயன்பெறும் வகையில், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் (06018/ 06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குகிறது. தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (23). இவா், தூத்துக்குடியில் உள்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்,... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு: கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கிளீனரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றன... மேலும் பார்க்க