செய்திகள் :

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

post image

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கம், சிவகாசி ஆல் இந்தியா சேம்பா் ஆஃப் மேச் இண்டஸ்ட்ரீஸ், சாத்தூா், குடியாத்தம், தென்காசி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்கள் இணைந்து நடத்தும் இவ்விழா சனிக்கிழமை (செப்.20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு, நூற்றாண்டு விழா குழு தலைவா் எஸ் .மகேஸ்வரன் தலைமை வகிக்கிறாா். விழா குழு துணைத் தலைவா் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூா்த்தி, பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சிறப்புரையாற்றுகிறாா். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம் விளக்க உரையாற்றுகிறாா்.

விழா நடைபெற உள்ள எஸ்.எஸ். டி.எம்., கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் பந்தல் அமைக்கும் பணிகளை நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவா் ரத்தினகுமாா், நிா்வாகிகள், விழா ஏற்பட்டாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா் .

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு: கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கிளீனரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றன... மேலும் பார்க்க

உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு புதிய பேருந்து சேவை

உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு பல்வேறு கிராமங்களை இணைத்து புதிய பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளத... மேலும் பார்க்க

அக்.11இல் விஜய் தூத்துக்குடி வருகை: காவல்துறை அனுமதி கோரி மனு

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், அக்.11இல் தூத்துக்குடி வருகை தர உள்ளதையடுத்து, காவல்துறை அனுமதி வேண்டி தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், அக்.11ஆம் தேதி... மேலும் பார்க்க