செய்திகள் :

கோவை: உயிரிழந்த மூதாட்டியின் தாலி திருட்டு; மருத்துவமனை ஊழியர் சிக்கியது எப்படி?

post image

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்தும் இங்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

இதனிடையே பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த மே 20-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மூதாட்டியின் உடலைப் பெறுவதற்காக அவரின் மகள் செல்வி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர் அம்மாவின் கழுத்திலிருந்த ரூ. 40,000 மதிப்பிலான தாலி சங்கிலி மற்றும் தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சடலம்
சடலம்

செல்வியின் கணவர் காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் செல்வி புகார் அளித்திருந்தார்.

செல்வியின் புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

ராஜசேகர்
ராஜசேகர்

அவர் தான் மூதாட்டியின் கழுத்திலிருந்த தாலியைத் திருடினார் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மும்பை: வீட்டை எழுதிக்கொடுக்க மறுத்த தந்தை; கட்டையால் கால்களை அடித்து உடைத்த மகன்; என்ன நடந்தது?

மும்பையில் தனது பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்காததால் தந்தையின் காலை அவரது மகன் அடித்து உடைத்துள்ளார்.மும்பை தகிசர் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் விஜய் (73). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன... மேலும் பார்க்க

கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்

திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு... மாணவி புகார் டு இறுதி வாதம் - இதுவரை நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

``உன் வீட்டில் சொத்தை எழுதி வாங்கிட்டு வா..” - மனைவியின் வாயில் சூடு வைத்த கொடூரக் கணவன்

தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும்அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ந... மேலும் பார்க்க

``நீண்டகால விசாவில் மதுரையில் உள்ள பாகிஸ்தானியருக்கு வாக்குரிமை?'' - வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கு... மேலும் பார்க்க