செய்திகள் :

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

post image

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணேசன்.

அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று தனது மூன்று மகன்கள் மற்றும் மகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். அவருக்கு என ரூ. 1.25 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அவரது இரண்டாவது மகனான கணேசன் தனக்கு கடன் பிரச்னை இருப்பதால் அந்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால், செல்லையா  தர மறுத்தாராம். இதனையடுத்து அந்த பணத்தை கேட்டு தினமும் கணேசன் மது போதையில் செல்லையாவிடம் தகராறு செய்து வந்துள்ளாராம்.

இந்த நிலையில், வழக்கம் போல் செல்லையாவிடம் பணம் கேட்கவே அவரும் மறுத்துள்ளார். மது போதையில் இருந்த கணேசன், செல்லையாவை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

குருவிகுளம் காவல் நிலையம்

அக்கம் பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் செல்லையா.

தப்பியோடிய கணேசனை குருவிகுளம் காவல்நிலைய  போலீஸார் கைது செய்தனர். பணத்திற்காக மதுபோதையில் பெற்ற தந்தையையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: வீட்டை எழுதிக்கொடுக்க மறுத்த தந்தை; கட்டையால் கால்களை அடித்து உடைத்த மகன்; என்ன நடந்தது?

மும்பையில் தனது பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்காததால் தந்தையின் காலை அவரது மகன் அடித்து உடைத்துள்ளார்.மும்பை தகிசர் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் விஜய் (73). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன... மேலும் பார்க்க

கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்

திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு... மாணவி புகார் டு இறுதி வாதம் - இதுவரை நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

``உன் வீட்டில் சொத்தை எழுதி வாங்கிட்டு வா..” - மனைவியின் வாயில் சூடு வைத்த கொடூரக் கணவன்

தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும்அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ந... மேலும் பார்க்க

``நீண்டகால விசாவில் மதுரையில் உள்ள பாகிஸ்தானியருக்கு வாக்குரிமை?'' - வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது... மேலும் பார்க்க

கோவை: உயிரிழந்த மூதாட்டியின் தாலி திருட்டு; மருத்துவமனை ஊழியர் சிக்கியது எப்படி?

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந... மேலும் பார்க்க