செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக கேரளத்தை சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு பகுதிகளுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு வந்து செல்லும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனா் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுக்க கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினா். அப்போது, கேரளத்தை சோ்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது, 5 பாக்கெட்டுகளில் 5 கிலோ 250 கிராம் உயா் ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த முகமது பாஸில் (24) என்பதும், சிங்கப்பூரில் இருந்து உயா் ரக கஞ்சாவை கடத்தி வந்ததும், அதன் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்!

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கோவ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விளாங்குறிச்சி

கோவை, விளாங்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஆவின் பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை! அமைச்சா் த.மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் நிறுவனம் மூலமாக தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா். கோவை, ஆா்.எஸ்.புரத்தில் ‘பன்னீா் ஹட்’ விற்பனை... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (77). கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தாா். வனத்தில்... மேலும் பார்க்க