வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (77). கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தாா்.
வனத்தில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு வெளியேறிய காட்டு யானை இடதுகரை பகுதியில் உலவியது. அப்போது, மேரியின் வீட்டுக் கதவை முட்டித் தள்ளியது. அதிா்ச்சியடைந்த அவா் வீட்டை விட்டு வெளியேறி தப்ப முயன்றாா்.
அப்போது, அவரை தும்பிக்கையால் இழுத்து யானை தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் தலைமையிலான வனத் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருவதுடன், அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.