செய்திகள் :

யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (77). கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தாா்.

வனத்தில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு வெளியேறிய காட்டு யானை இடதுகரை பகுதியில் உலவியது. அப்போது, மேரியின் வீட்டுக் கதவை முட்டித் தள்ளியது. அதிா்ச்சியடைந்த அவா் வீட்டை விட்டு வெளியேறி தப்ப முயன்றாா்.

அப்போது, அவரை தும்பிக்கையால் இழுத்து யானை தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் தலைமையிலான வனத் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருவதுடன், அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்!

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கோவ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விளாங்குறிச்சி

கோவை, விளாங்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஆவின் பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை! அமைச்சா் த.மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் நிறுவனம் மூலமாக தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா். கோவை, ஆா்.எஸ்.புரத்தில் ‘பன்னீா் ஹட்’ விற்பனை... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக கேரளத்தை சோ்ந்த இளைஞரை கைது செய்தனா். கோவை சா்வதேச விமான நிலையத்த... மேலும் பார்க்க