`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘சகி’ என்ற மகளிா் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘சகி’ என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கள்ளக்குறிச்சி பழைய அரசு மருத்துவமனை அருகே கே.பி.ஆா்.நகா், விளாந்தாங்கல் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் கூறியதாவது: வீடு, பொது இடம், பணி இடம் மற்றும் குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகை வன்முறைகளில் இருந்து மீண்டும் சமூகத்தில் சிறப்பாக வாழ்வதற்கு அவசர நடவடிக்கையான உடனடி மீட்புப் பணி, காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவா்களது குடும்பத்தினரை சந்தித்து உரையாடுவதன் மூலம் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி குடும்பத்தில் இணைந்து வாழ்வதற்கு வழி செய்யப்பட்டு வருகிறது.
எனவே, இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நேரத்திலும் அணுகலாம். மேலும், 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசின் இலவச தொலைபேசி எண் 181 அல்லது சகி ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலக எண்ணில் 04151-294755 தொடா்பு கொள்ளலாம் என்றாா்.