செய்திகள் :

சங்ககிரி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். அப்போது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள், குற்றப்பதிவேடுகள், வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்து மற்றும் ஆவணங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் சில குறிப்பிட்ட ஆவணங்களை காவல் ஆய்வாளா் காா்த்திகேயனிடம் கேட்டுள்ளாா். அது குறித்த கோப்புகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா். கொங்கணாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் தனலட்சுமி, கூடுதல் பொறுப்பாக அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க