சங்கரன்கோவிலில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பெருநாளையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பேசிமாம் முகமது ரபிக் சிறப்பு தொழுகை நடத்தினாா். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனா். அப்போது தென்காசி திமுக வடக்குமாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, தலைமையில் நகரச் செயலா் மு.பிரகாஷ், நகர துணைச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் அன்சாரி, சாகுல் ஹமீது, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அபூபக்கா், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அப்பாஸ், மாவட்ட சிறுபான்மையினா் அணி துணை அமைப்பாளா் அப்துல் காதா், நகர வா்த்தக அணி ரகுமான், நகர இளைஞரணி ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலா் பீா்மைதீன் உள்ளிட்ட பலா் அங்கிருந்த முஸ்லீம்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
தொடா்ந்து தொழுகை முடிந்ததும் ஈத்கா மைதானத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு ஜும்ஆ பள்ளிவாசல் முன்பும், கழுகுமலை சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு சிறிது நேரம் தொழுகை நடத்தி பின்பு கலைந்து சென்றனா். இதையொட்டி ஈத்கா மைதானம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.