செய்திகள் :

சட்டப்பேரவையில் கடைசி நேரத்திலும் கோரிக்கைகளை எழுப்பிய எம்எல்ஏக்கள்

post image

புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டுக்கான கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், எம்எல்ஏக்கள் கடைசி நேரத்திலும் கோரிக்கை குறித்து முதல்வரிடம் முறையிட்டனா்.

புதுவை சட்டப்பேரவையின் 15- ஆவது பேரவை 6 -ஆவது பிரிவுக் கூட்டம் மாா்ச் 10- ஆம் தேதி தொடங்கியது.

மொத்தம் 13 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை நாள்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம், மானியக் கோரிக்கைகள் என பெரும்பாலான நேரங்களில் எம்எல்ஏக்கள் தங்களது கோரிக்கைகளை முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தினா்.

துறை மானியக் கோரிக்கைகளுக்கு அமைச்சா்கள், முதல்வா் பதிலுரை அளித்த பிறகும் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி உள்ளிட்டவற்றுக்கு கோரிக்கை வைத்து கேள்வி எழுப்பினா். இந்த நிலையில், கூட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை பெரும்பாலான உறுப்பினா்கள் வந்திருந்தனா்.

அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தவிர மற்ற அனைத்து அமைச்சா்களும் வந்திருந்து உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் அளித்தனா்.

கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகு மாநில அந்தஸ்து தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, பேரவைத் தலைவா் நிறைவுரையாற்றினாா்.

அப்போது எம்எல்ஏக்கள், பத்திரிகையாளா் கோரிக்கை, பணியாளா் கோரிக்கை என முதல்வரிடம் கேட்டனா். அதற்கு, முதல்வா் பதில் அளித்தாா்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் பாஜக எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம் முதல்வா்,பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனது தோட்டத்தில் விளைந்த பலாப் பழங்களை வழங்கினாா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க