செய்திகள் :

சதுரகிரியில் பங்குனி பிரதோஷ வழிபாடு

post image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 800 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் மாலை 4 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதே போல, மாயூரநாதசுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க