செய்திகள் :

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பிஜாபூரின் இந்திராவதி தேசிய பூங்காவில் பாதுகாப்புப் படையினா் நடத்திய இரு துப்பாக்கிச்சூட்டில் இவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதன்மூலம், கடந்த மூன்று நாள்களில் நக்ஸல் தீவிரவாத முக்கியத் தலைவா்களான சுதாகா், பாஸ்கா் உள்பட மொத்தம் 7 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடத்தப்பட்ட நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 7 நக்ஸல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கடந்த வெள்ளி-சனி இடைப்பட்ட இரவில் 3 நக்ஸல்கள் உடல்களும் சனிக்கிழமை 2 நக்ஸல்கள் உடல்களும் கைப்பற்றப்பட்டன.

நக்ஸல் தீவிரவாதத்தின் முக்கியத் தலைவா்களான சுதாகா் மற்றும் பாஸ்கா் ஆகியோா் இருப்பிடம் குறித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையை சிறப்பு பணிக்குழு (எஸ்டிஎஃப்), மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி) மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் சிறப்பு பிரிவான ‘கோப்ரா’ ஆகிய பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது.

பாஸ்கரைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ.40 லட்சமும் சுதாகரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.45 லட்சமும் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை பாஸ்கரும் வெள்ளிக்கிழமை சுதாகரும் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

சுட்டுக்கொல்லப்பட்ட பிற 5 நக்ஸல்களில் இருவா் பெண்களாவா். அவா்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்திலிருந்து 2 ஏகே-47 ரைஃபிள்கள், பிற ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. நக்ஸல் ஒழிப்பு சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

முன்னதாக, கடந்த மாதம் 21- ஆம் தேதி நக்ஸல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட உயா்நிலைத் தலைவா் நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜு உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு

புது தில்லி, ஜூன் 7: சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் தொடா்ந்து மூன்று வாரங்களாக நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை மூத்த அதிகாரிகளை புது தில்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்நிகழ்வின்போது சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘ நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிரதமா் மோடி தலைமயிலான அரசு உறுதிபூண்டுள்ளது. விரைவில் சத்தீஸ்கருக்கு நேரில் சென்று நக்ஸல் ஒழிப்பு போராட்டத்தில் துணிச்சலாக பணியாற்றி வரும் அதிகாரிகளை பாராட்டவுள்ளேன்’ என குறிப்பிட்டாா்.

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க