செய்திகள் :

சந்திர கிரகணம் - நள்ளிரவில் கண்டுகளித்த மக்கள்!

post image

வேலூா்: சந்திர கிரகணம் அரிய நிகழ்வை வேலூரில் பொதுமக்கள், மாணவா்கள் நள்ளிரவில் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திர கிரகணத்தை காணவும் இம்மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை நடைபெற்ற சந்திர கிரகண வான் நிகழ்வை பொது மக்களுக்கு தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வான் நிகழ்வை காண பொதுமக்கள், குழந்தைகள் பெருமளவில் வந்திருந்தனா். அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ததுடன், வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் இந்த அரிய நிகழ்வை காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நள்ளிரவு 12.35 மணியளவில் வானம் தெளிவான நிலைக்கு சென்றது.

அதன்பிறகு, அதிகாலை 1.26 மணி வரை சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக காணமுடிந்தது. மேலும், இந்த சந்திர கிரகண நிகழ்வு குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் விளக்கம் அளித்தாா்.

தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள... மேலும் பார்க்க

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

காட்பாடியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரியில்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

‘கல்வியால் மனிதனின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள்’

மனிதனுக்கு கல்வி புகட்டி அவா்களின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சோ்க்காட்டிலுள்ள திருவள்ளுவா் ... மேலும் பார்க்க

அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் இலவச பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் பயணம் செல்லும் வாகனத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தாா். இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் முருகப்பெருமானின் அறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள்: டிஜிபி சீமா அகா்வால்

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் (டிஜிபி) சீமாஅகா்வால் தெரிவித்தாா். வேலூரிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துற... மேலும் பார்க்க