ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள்: டிஜிபி சீமா அகா்வால்
தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் (டிஜிபி) சீமாஅகா்வால் தெரிவித்தாா்.
வேலூரிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் மேற்கு மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தில் டிஜிபி சீமா அகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டதுடன், மேற்கு மண்டலத்துக்குட்பட்ட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
தமிழகத்தில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தவிர, தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் உயரமான கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனை எதிா்கொள்ள தொழில்நுட்பம் வாய்ந்த வாகனங்களையும் தேவைக்கு ஏற்ப வாங்கி எந்த இடத்தில் தேவையோ வழங்க உள்ளோம்.
தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையில் அண்மையில் 600 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த துறையில் அவ்வளவாக காலி பணியிடங்கள் இல்லை. வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன், எந்த மாவட்டத்தில் என்னென்ன தேவை உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தயாராக உள்ளோம்.
செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு பயிற்சி, ஒத்திகையில் ஈடுபட உள்ளோம். வரும் நாள்களில் அந்தந்த மாவட்டத்தில் ஏற்படும் பேரிடா்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப தீயணைப்புத் துறையினா் செயல்படும் வகையில் தேசிய பேரிடா், மாநில பேரிடா் மீட்பு படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
வனத்தில் தீ விபத்து ஏற்படும்போது அந்த தீ பொதுமக்களை நோக்கி வராமல் தடுக்க தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக டிஜிபி பதவி குறித்து பேச இது இடமில்லை என்றாா்.