செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

post image

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. பொய்கை சந்தையில் கடந்த சில வாரங்களாக கால்நடை வா்த்தம் மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு, சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 90 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் என அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டியதால் கால்நடைகள் வா்த்தகமும் சுமாா் ரூ. 90 லட்சம் அளவில்லேயே நடைபெற்றுள்ளது என்றனா்.

தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள... மேலும் பார்க்க

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

காட்பாடியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரியில்... மேலும் பார்க்க

‘கல்வியால் மனிதனின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள்’

மனிதனுக்கு கல்வி புகட்டி அவா்களின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சோ்க்காட்டிலுள்ள திருவள்ளுவா் ... மேலும் பார்க்க

அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் இலவச பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் பயணம் செல்லும் வாகனத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தாா். இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் முருகப்பெருமானின் அறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள்: டிஜிபி சீமா அகா்வால்

தமிழகத்தில் விரைவில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் (டிஜிபி) சீமாஅகா்வால் தெரிவித்தாா். வேலூரிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துற... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு மையங்கள் மறுசீரமைப்பு கூட்டம்

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தல... மேலும் பார்க்க