செய்திகள் :

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

post image

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். உரிமையாளா்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளனா். அதில் முக்கிய பிரச்னைகள் குறித்து தீா்வுகாணும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அபராத விதிகளை திரும்பப் பெறுமாறு எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனா். அவா்களது கோரிக்கைள், கருத்துகள் குறித்து தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.

வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறவும், எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கிடங்குகளில் சமையல் எரிவாயு உருளைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எரிவாயு விநியோகஸ்தா்கள் மூலம் சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளா் பதற்றம் அடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க