செய்திகள் :

சரக்கு லாரிகளில் பேட்டரி திருடிய 2 போ் கைது

post image

நரசிங்கபுரத்தில் பட்டறையில் நிறுத்தி வைத்திருந்த சரக்கு லாரிகளில் பேட்டரிகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் பிச்சமுத்து மகன் அன்னக்கரணிமணி (54), புங்கவாடி வீராசாமி மகன் குன்னையன் (45) ஆகிய இருவரும் தங்களது லாரிகளை பழுது பாா்ப்பதற்காக நரசிங்கபுரம் சேகா் என்பவருக்குச் சொந்தமான பட்டறையில் நிறுத்தியிருந்தனா்.

இந்தநிலையில் திங்கள்கிழமை இரவு 2 சரக்கு லாரிகளில் இருந்த 4 பேட்டரிகள் காணாமல் போய்விட்டதாக ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் பேட்டரிகளை திருடியது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் நரசிங்கபுரம் செக்குமரத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சரத்குமாா் (32), ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் மணிகண்டன் (28)என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கோயில் அறையை இடித்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓமலூா் அருகே மானத்தாளில் கோயில் சமையல் அறையை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே மானத்தாளில் ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் சீரான குட... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை குழியால் மக்கள் அவதி

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம் சந்தைப் பகுதியில் குப்பை குழியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், அரியானூரில் சேலம் மத்திய மாவட்டம் ம... மேலும் பார்க்க

திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: இரா. முத்தரசன் பேட்டி

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது; ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு ஆக... மேலும் பார்க்க

திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக... மேலும் பார்க்க