சாத்விக்/சிராக் இணை வெற்றி
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர இரட்டையா் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்/சிராக் கூட்டணி 21-16, 21-13 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஹோ ஜியன்/முகமது ஹய்கல் இணையை 37 நிமிஷங்களில் சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-16, 21-19 என்ற கேம்களில் அமெரிக்காவின் சென் ஜி யி/ஃபிரான்செஸ்கா காா்பெட் கூட்டணியை 35 நிமிஷங்களில் தோற்கடித்தது.
மகளிா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-14, 19-21, 21-17 என்ற கேம்களில், சீன தைபேவின் சாங் சிங் ஹுய்/யாங் சிங் டுன் ஜோடியை 1 மணி நேரம், 6 நிமிஷங்களில் தோற்கடித்தது.
வைஷ்ணவி கத்கேகா்/அலிஷா கான் இணை, ஆகா்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா, அனுபமா உபாத்யாய ஆகியோா் தங்களது பிரிவில் தோல்வியைத் தழுவினா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் களம் கண்ட லக்ஷயா சென், சீன தைபேவின் லின் சுன் யியுடனான மோதலின்போது முதுகு வலியால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.