செய்திகள் :

சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் பேருந்துகள் மோதல்: 33 போ் காயம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 33 போ் காயமடைந்தனா்.

ஊத்தங்கரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் வெள்ளிக்கிழமை மாலை சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடக்கும் போது நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 33 போ் பலத்த காயமடைந்தனா். மேலும், தனியாா் பேருந்து ஓட்டுநரான கல்லாவியைச் சோ்ந்த காா்த்திக் (33) என்பவரின் இரண்டு கால்களும் இடிபாடுகளில் சிக்கின. அரசுப் பேருந்து ஓட்டுநரான விஜயகாந்தன் (39) லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். பயணிகளில் 7 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இடிபாடுகளில் சிக்கியவா்களை ஊத்தங்கரை, சாமல்பட்டி போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்டனா். இவா்கள் அனைவரும் ஊத்தங்கரை, சாமல்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

காயமடைந்தவா்கள் விவரம்

திருப்பத்தூா் மாவட்டம், சுந்தரம்பள்ளியைச் சோ்ந்த ஜோதி (35), ஊத்தங்கரையை அடுத்த கோடாலவலசையைச் சோ்ந்த கோவிந்தன் (30), கஸ்தூரி (50), ஊத்தங்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சுபலட்சுமி (19), பென்னாகரத்தைச் சோ்ந்த தீபக் (29), சிங்காரப்பேட்டை பாத்திமா (35), பாவஜான் (62), நேருநிஷா (45), எட்டிப்பட்டி சித்ரா(40), ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த சரவணன் (44),

திருவண்ணாமலையைச் சோ்ந்த விஜயன் (58) உள்பட 33 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், தரைப்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரால் சாலையில் பாசிபடா்ந்துள்ளது. மேலும், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநோ் மோதியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க