செய்திகள் :

சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

post image

சீனா உடனான இந்தியாவின் உறவு குறித்த சாம் பித்ரோடாவின் கருத்து, காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல என்றும் அது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சீனா உடனான மோதல் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என்றும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் எனவும் சாம் பித்ரோடா ஆங்கில ஊடகத்துக்கு (ஐ.ஏ.என்.எஸ்.) அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது,

நமது வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் சீனா சவாலாக உள்ளது. சீனா உடனான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும், இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான கூட்டு உத்தியை வகுக்கவுமான வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: ரேகா குப்தா

பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 மார்ச் 8-ம் தேதிக்குள் முதல் தவணையாக வழங்கப்படும் என்று தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா தெரி... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இரண்டு நாள் பயணமாகத் தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி இன்று காலை ரேபரேலிக்கு வந்தடைந்தார்.... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமா... மேலும் பார்க்க

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரைப் பொது இடத்தில் வைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிப்பாரா என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பம... மேலும் பார்க்க